close
Choose your channels

ரஜினி வீட்டுக்கு கதை சொல்ல லேட்டாக போனதற்கு காரணம் இவர்தான்: நெல்சன்

Sunday, August 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல ரிசல்ட் பெற்று உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது ’நெல்சன் கதை சொல்ல வீட்டுக்கு வரும்போது லேட்டாக வந்தார் என்று காமெடியாக கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி வீட்டின் கேட்டிலிருந்து என் வீட்டுக்குள் வர ஒரு நிமிடம் கூட ஆகாது, ஆனால் அவர் செல்போனை நோண்டிக் கொண்டே ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தார்’ என்றும் கூறினார்.

மேலும் வீட்டிற்குள் வந்தவுடன் ஒரு நல்ல காபி கொடுங்கள் என்று கேட்டார். ஏதோ என் வீட்டிற்கு ஏற்கனவே பலமுறை வந்து மோசமான காபி சாப்பிட்டது போல் நல்ல காபி கொடுங்கள் என்று கூறியதாகவும் காமெடியாக பேசினார்.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் நெல்சன் ’ரஜினிக்கு கதை சொல்ல லேட்டாக போனதற்கு என்ன காரணம் என்பதை விளக்கியுள்ளார்.

ரஜினிக்கு கதை சொல்ல செல்வதற்கு முந்தைய நாள் இரவு அனிருத் ஸ்டுடியோவில் அதிகாலை 4 மணி வரை இருந்ததாகவும் அதனால் தான் தன்னால் சரியான நேரத்திற்கு போக முடியவில்லை என்றும் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் ரஜினிக்கு கதை சொல்ல லேட்டாக நெல்சன் போனதற்கு காரணம் அனிருத் தான் என்று அவர் காரணம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.