close
Choose your channels

அமலாபால் பாலியல் தொல்லை விவகாரத்தில் திடீர் திருப்பம்

Monday, February 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை அமலாபால் அவர்களிடம் சென்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இதே விவகாரத்தில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமலாபால் கலந்து கொள்வதாக இருந்த மலேசிய கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மலேசிய நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரைத்தான் இன்று போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை இந்த வழக்கின் திடீர் திருப்பமாக கருதப்படுகிறது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவன மேலாளர் ரசாக் என்பவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருசிலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.