close
Choose your channels

ஊட்டி விடும் பிரச்சனை: இரண்டாக பிளவுபட்ட பிக்பாஸ் பெண்கள் அணி

Wednesday, June 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஜமானர்களாக நடித்து வரும் ஆண்கள் அணி கொஞ்சம் ஓவராக பில்டப் செய்து கொண்டிருக்கும் நிலையில் வேலைக்காரிகளாக நடிக்கும் பெண்கள் அணியிலும் சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்றைய புரமோவில் எஜமானர்களுக்கு வேலைக்காரிகள் சாப்பாடு ஊட்டி விடுதலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஷாரிக், மகத் ஆகியோர்களுக்கு ஐஸ்வர்யா சாப்பாடு ஊட்டி விட்டார். இதேபோல் செண்ட்ராயனும் தனது வேலைக்காரியிடம் சாப்பாடு ஊட்ட சொல்ல அவர் அதற்கு மறுத்துவிடுகிறார்.

இதுகுறித்த பிரச்சனையில் சாப்பாடு ஊட்டி விடுவது ஒரு வேலைக்காரியின் வேலை கிடையாது என்று வைஷ்ணவி கூறுகிறார். அப்போது ஐஸ்வர்யா குறுக்கிட்டு எனக்கு ஊட்டி விடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

உங்களுக்கு பிரச்சனை என்றால் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். இதனால் பெண்கள் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.