close
Choose your channels

பா ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

Saturday, September 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ மற்றும் ’கபாலி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் இயக்குனர் பா ரஞ்சித் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இயக்குனர் ரஞ்சித்திடம் கபாலி மற்றும் காலா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த தினகரன் சிவலிங்கம் என்பவர் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை ரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில் அவரது உதவியாளர்களான மாரி செல்வராஜ் ’பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும், அதியன் ஆதிரை ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும், பிராங்கிளின் ஜேகப் என்பவர் சமுத்திரகனி நடித்துவரும் ’ரைட்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ரஞ்சித்தின் உதவியாளர்களில் ஒருவரான தினகரன் சிவலிங்கம், அவருடைய தயாரிப்பில் உருவாகவ்ருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.