close
Choose your channels

'காலா 2' படம் குறித்து பா.ரஞ்சித்தின் முக்கிய அறிவிப்பு

Sunday, June 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமாவிலும் தலித் அரசியல் பேசும் இயக்குனர் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இந்த இரண்டு படங்களிலும் ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் தலித் அரசியலை முன்னிறுத்துவதே அவரது நோக்கமாக இருந்ததாக அவர் மீது ரஜினி ரசிகர்கள் குற்றஞ்சாட்டியதுண்டு.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் கஸ்பா-பி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் இரவு பாடசாலைகளை இயக்குனர் பா.ரஞ்சித் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், 'காலா' இரண்டாம் பாகம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, 'காலா படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பு இல்லை என்றும் ஆனாலும் காலா போன்ற திரைப்படங்கள் வர அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அவருடைய பதிலால் ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் ஜோதிகாவின் 'ராட்சசி' படத்தின் டிரைலர் குறித்து பேசிய பா.ரஞ்சித், 'இந்த படத்தின் டிரைலரில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தை மையப்படுத்தி உள்ளதாகவும், அது வரவேற்கத்தக்கது என்று கூறினார். இந்த படத்தின் டிரைலரில் பல நல்ல காட்சிகள் இருக்கும்போது அம்பேத்கார் படத்தை காட்டிய காட்சியை மட்டும் ரஞ்சித் குறிப்பிட்டு கூறியது நெட்டிசன்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.