close
Choose your channels

கணவர் மட்டுமே கலந்து கொண்ட வளைகாப்பு விழா: 'பாண்டவர் இல்லம்' நடிகையின் எமோஷனல் பதிவு!

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான ’பாண்டவர் இல்லம்’ என்ற சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வரும் அனுவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டவர் இல்லம்’ என்ற சீரியல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த சீரியலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் இந்த சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வரும் அனு தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்துள்ளது.

வளைகாப்பு என்றாலே உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் அனுவின் வளைகாப்பு மிகவும் எளிமையாக அவரது கணவர் மற்றும் குழந்தை மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

இது குறித்து அனு தனது இன்ஸ்டாவில் ,’வளைகாப்பு மிகவும் எளிமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நானும் என் கணவரும் மட்டுமே இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். என் கணவர்தான் எனக்கு நலங்கு செய்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் புது மணப்பெண் போல் வெட்கப்பட்டு முகம் சிவந்தேன்’ என்று எமோஷனாக பதிவு செய்துள்ளார்.

அனுவின் வளைகாப்பு புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.