close
Choose your channels

'பரியேறும் பெருமாள்' நடிகர் கதிர் மனைவியை பார்த்ததுண்டா? இதோ அழகிய புகைப்படங்கள்..!

Wednesday, April 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கதிர். இவரது திருமண தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான ’மதயானை கூட்டம்’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பிறகு அவர் ’கிருமி’ ’என்னோடு விளையாடு’ ’விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு பேரையும் புகழையும் பெற்று தந்த படம் ’பரியேறும் பெருமாள்’ என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் விஜய்யின் ‘பிகில்’ படத்திலும் வேறு சில படங்களிலும் நடித்தார். தற்போது அவர் ‘தலைக்கூத்தல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நடிகர் கதிர் கடந்த 2018 ஆம் ஆண்டு சஞ்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த திருமணத்திற்கு இயக்குனர் அட்லி உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.