close
Choose your channels

கோடிட்ட இடங்களை நிரப்புவது காதலா? வாழ்க்கையா? பார்த்திபன்

Friday, November 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் வெற்றியை அடுத்து பார்த்திபன் இயக்கவுள்ள படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. பார்த்திபனின் குருநாதர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பார்வதி நாயர், தம்பிராமையா,
சிங்கம்புலி உள்பட பலர் நடிக்கவுள்ளனர்
தனது படங்களின் தலைப்புகள் மூலமே தனது தனித்துவத்தை நிரூபிக்கும் பார்த்திபன் இந்த படத்திலும் புதுமையான தலைப்பு வைத்து அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளார். இந்த படத்தின் கதை குறித்து பார்த்திபன் கூறியபோது, 'பிழைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம். அது ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம்.... அது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்கரு' என்று கூறியுள்ளார்.
திரையுலகில் நுழையும்போது தனது வாழ்க்கை கோடிட்ட இடங்களாக இருந்ததாகவும், அந்த இடத்தை நிரப்பிய குருநாதர் பாக்யராஜ் அவர்களின் மகனுக்கு இந்த படம் அவருடைய வாழ்க்கையின் கோடிட்ட இடங்களை நிரப்பும் வகையில் இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி' மற்றும் 'பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்' இணைந்து தயாரித்து இருக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கின்றார். அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இந்த படத்திற்கு நடன இயக்குநர் பிரபு தேவா நடன இயக்குனராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.