close
Choose your channels

லைப்லாம் எப்படி போகுது? பிக்பாஸ் முடிந்ததும் மாயாவுக்கு செக் வைத்த பிரதீப்..

Tuesday, January 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில் அதில் அர்ச்சனா டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் அவருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தது என்பதும் தெரிந்தது

மாயா மிகவும் நம்பிக்கை உடன் தனக்கு டைட்டில் பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு மூன்றாம் இடமே கிடைத்தது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த நிலையில் பிரதீப் தன்னுடைய சமூக வலைதளத்தில் மாயாவுக்கு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் கூறி இருப்பதாவது: ’ஹாய் மாயா, லைப்லாம் எப்படி போகுது? நீ நல்லா இருப்பனு தெரியும். என்னுடைய நட்பின் மதிப்பு 50 லட்சம். நான் அவ்வளோலாம் வொர்த் இல்லனு நீ நினைச்சா. நான் புரிஞ்சிக்கிறேன். உன்னோட விளையாண்டது நல்லா இருந்துச்சு. செக் மேட்’ என ட்விட் செய்து இருக்கிறார்.

பிரதீப் ஆண்டனியை விளையாடி தோற்கடிக்க முடியாது என ஆரம்பத்தில் புரிந்து கொண்ட மாயா, பகைவருடன் உறவாடி கெடு என்ற மொழிக்கேற்ப அவரை தனது அண்ணனாக ஏற்றுக் கொள்வது போல் நடித்து, அவருடைய அன்பை பெற்று, ஏமாற்றி அதன் பின் திடீரென அவரது முதுகில் குத்தி சதி செய்து வெளியேற்றி விட்டார். இதை பிரதீப் மிகவும் தாமதமாக புரிந்து கொண்டாலும் அவரது கையை மீறி நிலவரம் சென்று விட்டதால் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் தான் இந்த ஆதங்கமான பதிவை பிரதீப் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவுக்கு பிரதீப் ரசிகர்கள் ’மாயாவுடன் எந்த விதமான நட்பும் கொள்ள வேண்டாம், அவர் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டார். ஒருவேளை நீங்கள் மாயாவை மன்னித்தாலும், எங்களால் மாயாவை மன்னிக்க முடியாது, கர்மா கண்டிப்பாக தண்டனை கொடுக்கும்’ என்று கூறி வருகின்றனர். பிரதீப் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.