close
Choose your channels

இசைஞானிக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஜனாதிபதி

Saturday, June 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் IndiaGlitz இசைஞானிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் குடிமகனும் இந்திய ஜனாதிபதியுமான ராம்நாத் கோவிந்த் அவர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழில் தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியதாவது;

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.