close
Choose your channels

'எல்லாம் முடிந்தது வீட்டிற்கு திரும்பி விட்டேன்': பிரியா பவானி சங்கர்

Wednesday, August 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வீட்டிற்கு திரும்பி விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்தார் என்பதும் அந்த பதிவுகள் மிக பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் ஹெலிகாப்டரில் இருந்து பயிற்சியாளருடன் கீழே குதிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை முடித்துவிட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட வீடு திரும்பி விட்டேன் என பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ’நாங்கள் வெளிநாட்டில் பயணம் செய்தோம், வெவ்வேறு நபர்களை சந்தித்து அவர்களின் மொழி தெரியாமல் அவர்களுடைய கதைகளை கேட்டோம், அவர்கள் சொல்வதை கேட்பதே ஒரு சாகசமாகவும், வேடிக்கையாகவும் சில சமயங்களில் பைத்தியக்காரத்தனம் ஆகவும் இருந்தது. இப்போது விநாயகர் சதூர்த்தி கொண்டாட வீடு திரும்பிவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடிகை பிரியா பவானிசங்கர் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.