close
Choose your channels

இந்த 3 மூன்று இயக்குனர்கள் படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார்: ப்ரியா பவானி சங்கர்..!

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் இந்த மூன்று இயக்குனர்கள் படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் பிஸியான நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். அவர் எஸ் ஜே சூர்யாவின் 'பொம்மை' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 'இந்தியன் 2', 'டிமான்டி காலனி 2', 'ஜீப்ரா' 'அரண்மனை 4' ஹரி-விஷால் இணையும் படம் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிரியா பவானி சங்கர் ’மான்ஸ்டர்’ படத்தை இயற்றிய நெல்சன் வெங்கடேசன், ’பொம்மை’ படத்தை இயக்கிய ராதா மோகன் ஆகியோர்களின் அடுத்த படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார் என்று கூறினார்

மேலும் தான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் வெற்றிமாறன் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்றும் அவரது படத்திலும் கதை கேட்காமல் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து வெற்றிமாறன் உள்பட 3 இயக்குனர்களும் தங்களது அடுத்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரை நடிக்க வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.