close
Choose your channels

பிரியங்கா சோப்ராவின் 'சிட்டாடல்': முதல் எபிசோடே சரவெடி..!

Friday, April 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடித்த ’சிட்டாடல்’ என்ற இணைய தொடர் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் முதல் எபிசோடே தெறிக்க வைக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு எபிசோடு வெளியாக இருக்கும் நிலையில் முதல் எபிசோடில் ’சிட்டாடல்’ குழுவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது நண்பர் ரிச்சர்ட் மேடன் ரயிலில் செய்யும் காட்சி உள்ளது.

அதே ரயில் பயணம் செய்யும் ஒருவர் யுரேனியம் வைத்திருக்கும் நிலையில் அதை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் பிரியங்கா சோப்ராவுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு. அதை அதிரடியாக அவர் கைப்பற்ற முயலும் போது எதிரியின் ஆட்கள் சுற்றி வளைத்து விட, பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது நண்பர் அதிரடியாக ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அங்கிருந்தவர்களை சுட்டு வீழ்த்தி தப்பிக்கின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் வில்லன் ரயிலில் வெடிகுண்டு வைக்க, ரயில் வெடித்து சிதறி தண்ணீரில் விழுகிறது.

இதில் நினைவை இழக்கும் ரிச்சர்ட் மேடன் எட்டு வருடங்கள் கழித்து மனைவி குழந்தையுடன் இருக்கும் வகையில் காண்பிக்கப்படுகிறது. இதனை அடுத்து அவர் நினைவை இழந்த நிலையில் தான் யார் என்பதை கண்டுபிடிக்க முயலும் போது தனது நண்பரின் மூலம் தான் ’சிட்டாடல்’ குழுவின் ஒரு உறுப்பினர் என்பது தெரிய வருகிறது. மேலும் பிரியங்கா சோப்ரா இறந்திருக்கலாம் என்று அவரது நண்பர் கூறுகிறார்.

அப்போது 8 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சியில் தண்ணீருக்குள் இருந்து பிரியங்கா சோப்ரா வெளியே வருவது போன்ற காட்சிகளுடன் முதல் எபிசோடு முடிவடைகிறது. முதல் எபிசோடு அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளுடன் இருப்பதை அடுத்து அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.