close
Choose your channels

பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பீட்டா தெரிவித்த அதிருப்தி

Tuesday, December 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது நீண்டநாள் காதலரும் அமெரிக்காவின் பிரபல பாடகருமான நிக் ஜோன்ஸை கடந்த ஞாயிறு அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா அதிருப்தி தெரிவித்துள்ளது.

பிரியங்கா-நிக்ஜோன்ஸ் திருமணத்தில் யானைகள் சங்கிலி போட்டு கட்டப்பட்டிருந்ததாகவும், குதிரைகள் சாட்டைகளால் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், ஒரு பிரபலத்தின் திருமணத்தில் இதனை தவிர்த்திருக்கலாம் என்றும் பீட்டா அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதேபோல் தீபாவளி தினத்தில் பொதுமக்கள் வெறும் இரண்டு மணி நேரமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்தது. ஆனால் பிரியங்காவின் திருமணத்தின்போது 10 டிரக்குகள் பட்டாசுகள் வரவழைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு இவர்களை கட்டுப்படுத்தாதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.