close
Choose your channels

'பேட்ட' படம் பார்த்த ரஜினி ரசிகரை அடித்து கொலை செய்தவர் கைது!

Tuesday, January 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையரங்கில் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தை சிகரெட் பிடித்தபடியே பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒரு திரையரங்கில் மணிகண்டன் என்ற ரஜினி ரசிகர் ஒருவர் கடந்த 12ஆம் தேதி ரஜினியின் 'பேட்ட' படத்தை பார்க்க சென்றார்.

அப்போது படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அவர் ஸ்டைலாக சிகரெட் பிடித்ததாக தெரிகிறது. இதனால் அருகில் இருந்த நபர் அவரை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து மணிகண்டன் சிகரெட் பிடித்ததால் ஆத்திரமடைந்த பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் மணிகண்டனை வெளியே இழுத்து வந்து அங்கிருந்த உருட்டுக்கட்டை ஒன்றால் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மணிகண்டன் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்ததார். இதனையடுத்து சிசிடிவி மூலம் மணிகண்டனை தாக்கிய நபரை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.