close
Choose your channels

ஷங்கர் படத்தின் மாஸ் அப்டேட்டை கொடுத்த ராம்சரண் தேஜா: வைரல் புகைப்படங்கள்!

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா, கைரா அத்வானி, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்.சி.15’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் நடந்து வருவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பஞ்சாப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து ’ஆச்சார்யா’ படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க இருப்பதாகவும் ராம்சரண் தேஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பஞ்சாபில் இருந்து ஆந்திராவுக்கு விமானத்தில் திரும்பும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

’ஆர்.சி.15’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.