close
Choose your channels

'என்னை வாடின்னு கூப்பிட்டான் ஆர்ஜே பாலாஜி: ஊர்வசி கூறும் ஷாக்கிங் தகவல்

Sunday, June 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊர்வசி நடித்த ’வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பேசிய ஊர்வசி, ‘என்னை ஆர்ஜே பாலாஜி வாடி என்று கூப்பிட்டான்’ என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்ஜேபாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்பட பலரது நடிப்பில் உருவான ’வீட்ல விசேஷங்க’ திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஊர்வசி ’ஆர்ஜே பாலாஜி என்னை வாடி என்று கூப்பிட்டான் என்று காமெடியாக கூறினார். அப்போது மேடைக்கு வந்த ஆர்ஜே பாலாஜி, ‘நீங்கள் ரொம்ப அநியாயமாக பேசுகிறீர்கள், நான் ஊர்வசி என்று வேண்டுமானால் கூப்பிட்டு இருப்பேன், ஆனால் வாடி என்று கூப்பிட்டதே இல்லை என்று கூற, ஆனால் அதை மறுத்த ஊர்வசி, ‘நீ என்னை வாடி என்று கூப்பிட்டாய், எனக்கு நன்றாக தெரியும் என்று கூற அதற்கு ஆர்ஜே பாலாஜி, ‘நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் என்று கூறியது பெரும் நகைச்சுவையாக இருந்தது.

அதன்பிறகு ஆர்ஜே பாலாஜி பேசியபோது, ‘ஊர்வசி மேடம் அவர்களை நான் என்னுடைய அம்மாவாகத்தான் பார்க்கிறேன். அவருடன் எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. அவருடன் நான் சேர்ந்து நடித்தது எனது வாழ்க்கையில் மிகப் பெரிய பாக்கியம்’ என்று கூறினார்.

அதன் பிறகு ஊர்வசி பேசியபோது, ‘புதுக்கவிதை’ படத்தில் வரும் பாட்டின் வரிகளை போல் ’என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்’ என்பதுபோல், என்னை யார் என்று புரிய வைத்தது ஆர்ஜே பாலாஜி தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த விழா ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.