close
Choose your channels

அஜீத்திடம் என்னதான் இருக்குது? ஆர்ஜே பாலாஜி ஆச்சர்யம்

Saturday, October 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு நண்பனாக நடித்த ஆர்.ஜே.பாலாஜியின் ஒன்லைன் நகைச்சுவை வசனங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் நயன்தாராவிடம் பேசும், ''ஒரு பொண்ணு ஒரு பையனை லவ் பண்ணா என்ன கேட்பா? ரீசார்ஜ் பண்ணிக்கொடு. ஃபேஸ்புக்ல போட்டோ போட்டா லைக் பண்ணு. ஆடித்தள்ளுபடியில ஆறு டாப் வாங்கிக் கொடுன்னு சொல்வா. நீ என்ன கேட்குற?'' என்று கலாய்க்கும் வசனத்தில் தியேட்டரில் ஆடியன்ஸ் வரவேற்பு அபாரமாக இருந்தது.

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் சுவாரஸியமான பதில் அளித்தார். முதல் நாள் முதல் காட்சி தேவி தியேட்டரில் பார்த்தபோது, ரசிகர்களின் கைதட்டலை பார்த்து தான் மகிழ்ச்சி அடைந்ததாக கூறிய பாலாஜி, அஜீத்துடன் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, 'ஆம் கண்டிப்பாக அஜீத்துடன் நடிப்பேன். அவர் நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு ஸ்பெஷலான மனிதர் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றேன். அப்படி என்ன ஸ்பெஷல் அவரிடம் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்

மேலும் ஒரு ரசிகர் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது குறித்த ஒரு கேள்விக்கு, "தயவுசெய்து உடனடியாக இந்த ரசிகர் போரை நிறுத்துங்கள் என்று கூறினார். மேலும் படப்பிடிப்பின்போது நயன்தாராவை கலாய்ச்சிங்களா? என்ற கேள்விக்கு 'நயன்தாரா, என்னுடைய சகோதரி மாதிரி. படப்பிடிப்பின்போது இருவரும் ஒருவருக்கொருவர் செல்லப்பெயர் வைத்துக்கொண்டு செல்லமாக கலாய்த்து கொள்வோம்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.