close
Choose your channels

சாஹோ ரிலீஸ் தள்ளி போகிறதா? அஜித் பட விநியோகிஸ்தர்கள் நிம்மதி!

Thursday, July 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமான 'சாஹோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி 15 நாட்கள் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதியும், பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அஜித் படத்திற்கு பிரபாஸ் படத்திற்கும் இடையே ஒரு வாரம் மட்டுமே வித்தியாசம் இருந்ததால் அஜித்தின் திரைப்படம் ஒரு வாரத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்க விநியோகிஸ்தர்கள் தயங்கியதாகவும் கூறப்பட்டது

இந்தநிலையில் பிரபாஸின் 'சாஹோ' ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள், எடிட்டிங் பணிகள் மற்றும் பேட்ச் வொர்க் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், இந்த படத்தின் தாமதத்திற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சாஹோ ரிலீஸ் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளிப்போவதால் அந்த தேதியில் ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பல திரைப்படங்களில் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் 'சாஹோ' தள்ளிப்போவதால் அஜித் பட விநியோகஸ்தர்கள் நிம்மதி அடைந்துள்ளதாக தெரிகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.