close
Choose your channels

15 வயதில் பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணியின் மீடூ குற்றச்சாட்டு

Thursday, October 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தனக்கு 15 வயது இருக்கும்போது இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா அவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் பிரபல நடிகையாக இருக்கும் சஞ்சனா கல்ராணி கடந்த 2006ஆம் ஆண்டு 'கண்ட ஹெண்டதி' என்ற கன்னட படத்தில் நடித்தார். மல்லிகா ஷெகாவத் நடித்த 'மர்டர்' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு முத்தக்காட்சியை 50 முறை எடுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா மீது சஞ்சனா புகார் தெரிவித்தார்.

இந்த புகாரை இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா மறுத்தது குறித்து கருத்து கூறிய சஞ்சனா, 'எந்த திருடராவது தன்னை திருடர் என்று ஒப்புக்கொண்டது உண்டா? நான் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் குறித்து நான் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இவர் தவறானவர் என்பதால் தான் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.