close
Choose your channels

இயக்குனராகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உதவியாளர்: ஹீரோ யார் தெரியுமா?

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ மற்றும் தனுஷ் நடித்த ’விஐபி 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்பது தெரிந்ததே. இந்த படங்களை அடுத்து அவர் பொன்னியின் செல்வன் என்ற வெப்தொடரை இயக்கவுள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’விஐபி-2’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சந்தோஷ் என்பவர் தற்போது இயக்குனராக உள்ளார். அவர் இயக்கும் முதல் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

இந்த படத்தில் அஜித்தின் விஸ்வாசம், விவேகம், உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரித்து உள்ளது என்பதும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சந்தோஷ் தற்போது இயக்குனராகி உள்ளதை அடுத்து சௌந்தர்யா ரஜினி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.