close
Choose your channels

சமந்தாவை யாராலும் தடுக்க முடியாது.. சொன்ன நடிகை யார் தெரியுமா?

Sunday, April 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அவர் மன வலிமை மிக்கவர் என்றும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் சமீபத்தில் நானியுடன் அவர் நடித்த ’தசரா’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது மட்டுமின்றி ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய கீர்த்தி சுரேஷ் பல சுவராசியமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் சமந்தா குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் என்றால் அது சமந்தா தான் என்றும் நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர் என்றும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது என்றும் பதிவு செய்திருந்தார். இந்த பதிவை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட சமந்தா, கீர்த்தி சுரேஷ்க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அது மட்டும் இன்றி ஜெயம் ரவியுடன் ’சைரன்’ மற்றும் ’ரகு தாத்தா’ ’ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.