close
Choose your channels

சிறகடிக்க ஆசை: பணத்தை திருடி வசமாக மாட்டி கொண்ட மனோஜ்.. ரோஹினி எடுக்கும் முடிவு..!

Friday, September 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் குறுகிய காலத்தில் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று விட்டது என்பதும் ஒவ்வொரு நாளும் இந்த சீரியலை பார்க்க பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயா தனது பீரோவில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் காணாமல் போன நிலையில் அந்த பணத்தை மீனாவின் தம்பி சத்யா தான் எடுத்தார் என்று குற்றம் சாட்டி அவர்களது குடும்பத்தையே வரவழைத்து அவமானப்படுத்தி வருகிறார்.

மீனாவும் அவரது அம்மாவும் கண்ணீர் மல்க சத்யா எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். மீனாவின் தங்கையும் தனது தம்பி திருடன் இல்லை என வாதாடுகிறார். ஆனால் சத்யா தான் பணத்தை எடுத்து இருப்பான் என்று உறுதியாக விஜயா கூறியதோடு மனோஜிடம் போலீசுக்கு போன் பண்ணு என்றும் கூறுகிறார்

இந்த நிலையில் தான் மனோஜ் தான் அந்த ஒரு லட்ச ரூபாய் எடுத்தார் என்பது தற்செயலாக தெரிய வருகிறது. அதன் பிறகு முத்து ஆடும் ஆட்டம், மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் விஜயாவிடம் கேட்கும் எதிர் கேள்வி ஆகிய காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் உள்ளது.

இந்த நிலையில் தனது கணவன் தான் பணத்தை திருடியது என அறிந்து ரோஹிணி அதிர்ச்சியில் உள்ளார். ஏற்கனவே தனது கணவன் 27 லட்ச ரூபாயை திருடி கொண்டு சென்றவன் என முத்து அடிக்கடி சுட்டிக்காட்டுவதால் ஆத்திரமடைந்த ரோகிணி தற்போது மீண்டும் ஒரு லட்ச ரூபாய் திருடியுள்ளான் என்பதை அறிந்து அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ரோஹினி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிந்து கொள்ள முடியும்.

மொத்தத்தில் விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் சென்டிமென்டாகவும் சென்று கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை அனைவர் மனதிலும் இடம் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.