close
Choose your channels

'இன்று நேற்று நாளை' இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்

Tuesday, January 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷ்ணு, மியார் ஜார்ஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய 'இன்று நேற்று நாளை' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக மாறியது. இந்த படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது.


இந்நிலையில் இயக்குனர் ரவிகுமாரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் திருநாள் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'நேற்று இன்று நாளை' போலவே இந்த படமும் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படமா? என்பது விரைவில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.