close
Choose your channels

த்ரிஷாவுக்கு சிவகார்த்திகேயன் நன்றி கூறியது ஏன்?

Friday, January 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா நடித்த 'அரண்மனை 2' இன்று வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் அவர் சமூக வலைத்தளம் ஒன்றில் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.


கமல்ஹாசன், விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், உள்பட முன்னணி நடிகர்கள் முதல் புதுமுக நடிகர்கள் வரை கிட்டத்தட்ட அனைவருக்கும் ஜோடியாக நடித்துவிட்ட த்ரிஷாவுக்கு, யாருடன் நடிக்க ஆசை என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு 'ரஜினியுடன் நடிக்க ஆசை' என்று பதிலளித்துள்ளார்.

அதேபோல் சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்ததாக வெளிவந்த தகவல் குறித்து ஒரு ரசிகர் ஒருவர் கேட்டபோது, அந்த செய்தியில் உண்மையில்லை என்றும் சிவகார்த்திகேயனுடன் எப்போது வேண்டுமானாலும் நடிக்க தயார் என்று பதிலளித்துள்ளார். இந்த பதிலுக்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் த்ரிஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.