close
Choose your channels

மறைந்த பிரபல தமிழ் நடிகரின் மனைவிக்கு 6 மாதம் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Thursday, May 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜியின் ’எல்கேஜி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த பிரபல நடிகர் ரித்தீஷ் மனைவிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னி ஜெயந்த் இயக்கத்தில் உருவான ’கானல் நீர்’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜேகே ரித்தீஷ். அதன் பிறகு இவர் நடித்த ’நாயகன்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கிய ’எல்கேஜி’ என்ற திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் ரித்தீஷ் நடித்திருந்தார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் இவர் ஈடுபட்டிருந்தார் என்பதும் ராமநாதபுரம் தொகுதி எம்பி ஆகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில் இவரது மனைவி ஜோதீஸ்வரி என்பவர் செக் மோசடி வழக்கில் சிக்கியதாக கூறப்பட்டது.

காரைக்குடியில் நகை பட்டறை தொழில் செய்யும் திருச்செல்வம் என்பவரிடம் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வைரம் வெள்ளி நகைகள் வாங்கிவிட்டு அதற்காக அவர் மூன்று காசோலை கொடுத்ததாகவும் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஜோதீஸ்வரி மீது திருச்செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் 60 லட்ச ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை ஜோதீஸ்வரிக்கு அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.