close
Choose your channels

ஆஸ்கார் விழாவில் தமிழ் நடிகைக்கு கிடைத்த மரியாதை

Monday, March 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் சினிமா நட்சத்திரங்களால் மதிக்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 90வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பல நாடுகளை சேர்ந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். நம்மூரில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் திடீரென எதிர்பாராமல் ரசிகர்களை துயரக்கடலில் மூழ்கடித்து மறைந்த இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவிற்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை இந்திய நேரப்படி 9.35 மணிக்கு இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் பழம்பெரும் நடிகர் சசிகபூர் ஆகியோர்களுக்கு மறைவிற்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக மேடையில் அறிவிக்கப்பட்டது. ஒரு தமிழ் நடிகையின் மறைவிற்கு உலக அளவில் நடைபெறும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.