close
Choose your channels

ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் ஒரு இந்திய இயக்குனர்?

Saturday, August 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் ஒரு திரைப்பட இயக்குனரின் சம்பளம் மட்டுமே ரூ.100 கோடி என்ற தகவல் இந்திய திரையுலகினர் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. ஆம், நீங்கள் யூகித்தது சரிதான்..அவர்தான் எஸ்.எஸ்.ராஜமவுலி
எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது 'பாகுபலி 2' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதால் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பு ரூ.45 கோடிக்கு விற்பனையாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கேரள ரிலீஸ் உரிமை சுமார் 15 கோடி ரூபாய்க்கும், வடமாநில ரிலீஸ் உரிமை ரூ100 கோடி முதல் ரூ.150 கோடிக்கும் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ், மலையாளம், இந்தி பதிப்பு வியாபாரத்தில் 50% தொகையை எஸ்.எஸ்.ராஜமவுலி தனது சம்பளமாக கேட்டுள்ளதாகவும், இந்த தொகை ரூ.100 கோடியை தாண்டும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய திரையுலகில் இதுவரை எந்த இயக்குனரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.