close
Choose your channels

சிக்கிய மரண வாக்குமூலம்: யாஷிகா காதலன் கைது!

Saturday, February 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமல் நடித்த 'மன்னர் வகையறா' உள்பட ஒருசில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவருமான ஷீலா ஜெபராணி என்ற நடிகை யாஷிகா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று வெளியான செய்தியை பார்த்தோம். இந்த தற்கொலைக்கு அவரது காதல் தோல்வியே காரணம் என்றும், காதலனுடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்த யாஷிகா, திடீரென காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் யாஷிகாவின் தாயார் போலீசாரிடம் ஒரு புதிய ஆதாரத்தை சமர்ப்பித்தார். தனது மகள் தற்கொலைக்கு முன்பு எழுதிய டைரியில் இருந்து சில பக்கங்களை புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ் ஆப்பில் தனக்கு அனுப்பியதாகவும், தன்னை ஏமாற்றிய காதலனை சும்மா விடக்கூடாது என்று செல்போனில் தொடர்பு கொண்டு கூறியதாகவும் தெரிவித்தார். யாஷிகாவின் தாயார் சமர்ப்பித்த வாட்ஸ் அப் புகைப்படத்தில் 'காதலனுக்காக 3 நாட்களாக சாப்பிடாமல் தவிப்பதாகவும், காதலுக்காக சினிமா வாய்ப்புகளை விட்டு விலகியதையும், முழுமையாக நம்பிய காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றதாகவும் உருக்கமாக டைரியில் எழுதியிருந்த தகவல் இருந்தது

இதனையடுத்து இந்த ஆதாரத்தை யாஷிகாவின் மரண வாக்குமூலமாக கருதிய போலீசார், அவரது காதலனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் யாஷிகாவின் காதலனை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அவரது பெயர் மோகன்பாபு என்பதும், அவர் யாஷிகாவை காதலித்து திருமணம் செய்யாமல் வாழ்ந்ததும் தெரிய வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.