close
Choose your channels

பூஜையுடன் தொடங்கியது சூர்யாவின் அடுத்த படம்

Sunday, April 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'என்.ஜி.கே' மற்றும் 'காப்பான்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கவுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே '8 தோட்டாக்கள்' மற்றும் 'சர்வம் தாளமயம்' ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சத்யசூர்யா படத்தொகுப்பில் பூர்ணிமா காஸ்ட்யூமில் உருவாகவிருக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.