close
Choose your channels

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: கார்த்தியை பெருமையாக கூறிய சூர்யா

Tuesday, June 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அண்ணன் தம்பியான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே முன்னணி நடிகர்களாக உள்ளனர். இதற்கு முன் எத்தனையோ சகோதரர்கள் நடிகர்களாக இருந்தாலும் யாராவது ஒருவர்தான் முன்னணி நடிகர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தில் சூர்யா-கார்த்தி சகோதரர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்

இந்த நிலையில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'சின்னபாபு' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அதன் தயாரிப்பாளர் சூர்யா பேசியதாவது:

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பழமொழி உண்டு .கார்த்தியை நான் அப்படித்தான் பார்கிறேன் .தம்பி கார்த்தியின் வளர்ச்சியும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் பக்குவமும் எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் என்னை ஆச்சிரியபடுத்தின.

வாழ்கையில் பணம் , பதவி , புகழ் எல்லோருக்கும் வரலாம் .ஆனாலும் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம் .அதைத்தான் இந்த படம் சொல்கிறது .விவசாயிகளின் சிறப்பையும் பேசுகிறது .இந்த படத்தை விவசாயிகளுக்கு அர்பணிக்கிறேன் “.இவ்வாறு சூர்யா பேசினார் .

நடிகர் கார்த்தி பேசும்போது :- “விவசாயிகளை பெருமைபடுத்தும் படமாக 'கடைக்குட்டி சிங்கம்' இருக்கும் .இந்த படத்தில் நான் விவசாயியாக நடித்து இருக்கிறேன் .அந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது .அதோடு உறவுகளின் முக்கியத்துவத்தையும் படத்தில் காட்சி படுத்தி உள்ளோம் .குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படமாக தயாராகி உள்ளது “என்றார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.