close
Choose your channels

ஆழ்வார்பேட்டை கமல் வீடு அருகே விபத்து:  நூலிழையில் உயிர் தப்பித்த தமிழ் நடிகர்!

Tuesday, August 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் அலுவலகம் இருக்கும் ஆழ்வார்பேட்டை அருகே விபத்து ஒன்று நேரிட்டதாகவும் அந்த விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த தாகவும் தமிழ் நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததை அடுத்து பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி மழைநீரை சாலையில் இருந்து வெளியேற்றி போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று காவேரி மருத்துவமனை, கமல்ஹாசனின் அலுவலகம் இருக்கும் சந்திப்பில் திடீரென ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மரம் விழுந்த இந்த விபத்திலிருந்து நூலிழையில் தப்பியதாக நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். எனவே சென்னை மக்கள் மிகவும் பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.