close
Choose your channels

பாட்டி, அம்மா, மகளுடன் நான்.. 4 தலைமுறையினர் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை..!

Sunday, February 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, கார்த்தி உட்பட சில பிரபலங்களுடன் நடித்த தமிழ் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாட்டி, அம்மா, மகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 4 தலைமுறை பெண்கள் என பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தொழில் அதிபர் நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

நடிகை ப்ரணிதா அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது பாட்டி, அம்மா, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து எங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு தலைமுறை பெண்கள் என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ப்ரணிதா திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்ட நிலையில் தற்போது அவர் ஒரு கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.