close
Choose your channels

பொய்ச்செய்தி பரப்பும் பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படுவார்கள்: தயாரிப்பாளர்கள்‌ சங்கம்

Friday, September 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொய்ச்செய்தி பரப்பும் பத்திரிகையாளர்கள் களையெடுக்கப்படுவார்கள் என தயாரிப்பாளர்கள்‌ சங்கம் தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ என்‌.ராமசாமி மற்றும்‌ நிர்வாகிகள்‌ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரையுலகில்‌ நடைபெறும்‌ முக்கிய நிகழ்வுகளை பொதுமக்களின்‌, பாராவைக்கு கொண்டு செல்வதில்‌ முக்கிய பங்குவகிப்பது ஊடகத்துறை. அத்தகைய ஊடகத்துறை தற்போது செயல்பட்டு வருவது, சினிமாத்துறையில்‌, உள்ள கலைஞர்களுக்கு, பெரிதும்‌ தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வகையில்‌, சமீபத்திய நிகழ்வுகளான நடிகர்‌ திருமாரிமுத்து அவர்களது மறைவிலும்‌, தயாரிப்பாளர்‌, இசையமைப்பாளர்‌ திரு.விஜய்‌ ஆண்டனி அவாகளது மகள்‌ மறைவிலும்‌ ஒருசில ஊடககங்கள்‌ நடந்து கொண்டது மிகவும்‌ வருத்தமளிக்கிறது.

சமீபகாலமாக ஒருசிலர்‌ திரைத்துறைப்பற்றி வரைமுறை, இல்லாமல்‌ செய்திகளை பரப்பி வருவதால்‌, அது. விஷயமாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள்‌ யூனியனை அழைத்து பேசி இதற்கு ஒரு வரைமுறைப்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளோம்‌.

இதில்‌, சோசியல்‌ மீடியா என்ற பெயரில்‌ தவறான செய்திகளை மக்களுக்கு பரப்பி வருபவர்களை களையெடுக்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்‌. இவ்வாறு, அந்த. அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.