close
Choose your channels

படப்பிடிப்பில் திடீரென படமெடுத்த நல்ல பாம்பு.. நடிகை பதிவு செய்த அதிர்ச்சி வீடியோ.!

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு நல்ல பாம்பு நுழைந்து படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோவை சீரியல் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ஆலியா மானசா. இவர் ’ராஜா ராணி’ தொடரில் நடித்த சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகை ஆலியா மானசா திருமணத்திற்கு பின்னரும் பிஸியாக சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் தற்போது அவர் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் படப்பிடிப்பின் போது திடீரென ஒரு நல்ல பாம்பு படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள் வந்ததாகவும் அதை கண்டு அதிர்ச்சி அடைந்து பட குழுவினர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

’எங்கள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென புதிய விருந்தினர் வந்திருக்கிறார்’என்ற கேப்ஷனுடன் ஆலியா மானசா வெளியிட்டுள்ள பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோவை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து படப்பிடிப்பின் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்று அவருக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.