close
Choose your channels

நள்ளிரவில் திடீரென மருத்துவமனை சென்ற விஜய்.. யாருக்கு என்ன ஆச்சு?

Friday, November 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நள்ளிரவில் திடீரென மருத்துவமனை சென்றதாக ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ’லியோ’ வெற்றி விழா நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவல் தெரிந்ததும் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புஸ்ஸி ஆனந்த் அவர்களை நள்ளிரவில் நடிகர் விஜய் நேரில் சென்று பார்த்ததாகவும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வரும் புஸ்ஸி ஆனந்த், விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.