close
Choose your channels

கொரோனா எதிரொலி: தளபதி விஜய்யின் மிகப்பெரிய மனவருத்தம்

Monday, April 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வரும் நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து திரை நட்சத்திரங்களும் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வையும், ஜாலியான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும் தங்களால் முடிந்த அளவுக்கு பெப்சி அமைப்பிற்கும், நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்,.

இந்த நிலையில் தளபதி விஜய்யிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் கடந்த சில நாட்களாக வெளிவரவில்லை. இதனால் விஜய் ரசிகர்களே வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யே மிகப்பெரிய மன வருத்தத்தில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய்யின் மகன் சஞ்சய், கனடாவில் படித்து கொண்டிருப்பதாகவும், கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் தனது மகனை பிரிந்து இருப்பதாலும், தனது மகன் கனடாவில் தனியாக இருப்பதாலும் அவர் மன வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றார் என்ற செய்தி விஜய்யை ஓரளவுக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.