close
Choose your channels

25 வருட சினிமா பயணம்: விஜய்யை சிறப்பிக்கும் 'தளபதி யுகம்' பாடல்

Sunday, November 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து அவரது திரையுலக பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று ஒரு பாடல் வெளியாகியுள்ளது. 'தளபதி யுகம்' என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த பாடலை கணேஷ் மற்றும் விவேக் ரவிச்சந்திரன் எழுத சூப்பர் சிங்கர் பாடகர் திவாகர் பாடியுள்ளார். குணசேகரன் பாலசுப்பிரமணியம் இசையில் உருவான இந்த பாடலை விஜய் விக்னேஷ் இயக்கியுள்ளார்

'திமில் பிடித்த தமிழர்கள் நாங்கள்,
அடக்க நினைத்தால் துள்ளி வருவது காளைகள் மட்டும் அல்ல
என் தமிழ் இனமும் கூட
நேற்று நாம் சத்தம் தட்டி வாடிவாசல் திறந்தோம்
இன்று ரத்தம் சிந்தியும் நம் மக்களை மீட்டெடுப்போம்
ஆளப்போறான் தமிழன்

என்ற வரிகள் இந்த 'தளபதி யுகம்' பாடலுக்கு முன் வருகிறது.

தளபதிக்கு தலை வணங்கும் தென்பொதிகை வணக்கம்
தளபதியின் பேரை சொல்லி பாட ஆசை இருக்கும்

என்று தொடங்கும் இந்த பாடல் முழுவதும் விஜய்யின் போற்றும் வகையில் உள்ளதால் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.