close
Choose your channels

வாபஸ் இல்லை, மீண்டும் போட்டி என மன்சூர் அலிகான் அறிவிப்பு!

Monday, March 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மன்சூர் அலிகான் தேர்தலில் போட்டியிடுவதாக சமீபத்தில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் வித்தியாசமான முறையில் தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திடீரென தான் பணம் வாங்கி விட்டதாக வதந்திகள் கிளம்பி இருப்பதாகவும், இதனால் மனம் நொந்து இருப்பதாகவும் இதனால் போட்டியில் இருந்து விலகப் போவதாகவும் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்றுடன் வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள் என்பதால் இன்று அவர் வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தான் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் வாபஸ் வாங்கும் முடிவை பரிசீலனை செய்து விட்டதாகவும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

எனது மகள் வெற்றியோ தோல்வியோ தேர்தலை சந்தித்து விட்டு வாருங்கள் என்று உற்சாகம் ஊட்டினார் என்றும் எனவே வதந்திக்கு பயந்து போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மன்சூரலிகான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.