close
Choose your channels

பிரசன்னா படத்துல நான் குழந்தையா நடிச்சிருக்கேன்: பிரபல ஹீரோயின்

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

17 வருடங்களுக்கு முன் பிரசன்னா நடித்த படத்தில் நான் குழந்தையா நடித்திருக்கிறேன் என்று பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘பிங்கர் டிப்’ என்ற வெப்தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 17ஆம் தேதி ஜீ5 தொலைக்காட்சியில் பிங்கர் டிப் வெப்தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் ’பிங்கர் டிப்’ சீசன்2 வெப்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரெஜினா, ‘பிங்கர் டிப்’ வெப்தொடரின் படப்பிடிப்புகளில் கிடைத்த அனுபவங்கள் குறித்து கூறினார். மேலும் இந்த தொடரில் பிரசன்னா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் அவருடன் 17 வருடங்களுக்கு முன் தான் குழந்தையாக நடித்திருப்பதாக அவர் கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியூள்ளது.

பிரசாந்த், லைலா நடித்த ’கண்ட நாள் முதல்’ என்ற திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நாயகி லைலாவின் சகோதரியாக ரெஜினா நடித்து இருந்தார் என்பதும் அப்போது ரெஜினாவுக்கு வயது 14 என்பதும் குறிப்பிடத்தக்கது. 17 வருடங்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் பிரசன்னாவுடன் நடிப்பது தனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் ரெஜினா தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.