close
Choose your channels

முழுக்க முழுக்க போதைப்பொருள் பணத்தில் தயாரித்த தமிழ் படம்.. ஜாபர் சாதிக் வாக்குமூலத்தில் திடுக் தகவல்..!

Saturday, March 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இடம் விசாரணை நடத்தியதில் போதைப்பொருள் கடத்தியதன் மூலம் முழுக்க முழுக்க ஒரு தமிழ் படம் தயாரித்துள்ளது விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கடத்தலில் மூளையாக இருந்தது ஜாபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்தில் ’இதுவரை மொத்தம் 3000 முதல் 3500 கிலோ போதைப்பொருள் கடத்தல் செய்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தை பெரும்பாலும் திரைப்படங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக தமிழில் தயாரான ’மங்கை’ என்ற திரைப்படம் முழுக்க முழுக்க போதைப்பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் திரைப்படம் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்த பணத்தை முதலீடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பணத்தை பயன்படுத்தி சென்னையில் ஒரு ஹோட்டல் கட்டி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் திரையுலகில் இருக்கும் சிலருக்கும் இவருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மும்பையில் உள்ள சில திரை உலக பிரபலங்களும் இவரது தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுவதால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் பல திரையரங்க பிரபலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.