close
Choose your channels

3 போட்டியாளர்களை குறிவைத்த மொத்த போட்டியாளர்கள்.. எலிமினேஷனில் இவர் உறுதியா?

Monday, October 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் இடம் பெற்றவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் படலம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் அதில் மொத்த போட்டியாளர்களும் மூன்றே மூன்று போட்டியாளர்களை குறி வைத்து நாமினேஷனில் சிக்க வைத்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் விஷ்ணுவை நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட எல்லா போட்டியாளர்களும் விஷ்ணுவை நாமினேஷன் செய்துள்ளனர். இதையடுத்து அவர் மொத்த வீடும் எனக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்

விஷ்ணுவை அடுத்து மாயாவை பல போட்டியாளர்கள் நாமினேஷன் செய்துள்ளனர். குறிப்பாக ரவீனா, ‘மாயா இந்த வீட்டில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி நாமினேஷன் செய்தார்.

இதனை அடுத்து மூன்றாவதாக, போட்டியாளர்கள் குறி வைத்தது அக்சயா என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் நாமினேஷன் செய்ய வந்த விஷ்ணு ’ எல்லோரும் இந்த வீட்டிற்கு சுற்றுலா வந்த மாதிரி ஓபி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறை கூறியதோடு, இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில் விஷ்ணு, மாயா மற்றும் அக்சயா ஆகிய மூவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.