close
Choose your channels

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது? முதல்வரை சந்தித்தபின் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

Thursday, July 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று சந்தித்த நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வரிடம் பேசினோம் என்றும் விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாகவும் கூறினார்.

முதல் கட்டமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுத்தாலும் நாங்கள் திரையரங்குகளை திறக்க தயாராக இருக்கிறோம் என்றும் அரசு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து திரையரங்குகளை திறப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே விரைவில் திரையரங்குகளை திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கும் என்றும் தமிழக அரசு அனுமதி வழங்கிய உடன் திரையரங்குகளில் திறப்போம் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டால் யாரும் ஓடிடி பக்கம் செல்ல மாட்டார்கள் என்றும் திரையரங்குகள் தற்போதி திறக்கப்படாததால் தான் தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் எத்தனை தொழில் நுட்பம் வளந்தாலும் திரையரங்குகள் தொழில் நிச்சயமாக அழியாது என்றும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.