close
Choose your channels

விஜய் எதற்காக என்னை சந்தித்தார்? முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ரகசியம்!

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யை சந்திப்பின்போது அவரது கோரிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தளபதி விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்தார் என்பதும் ’மாஸ்டர்’ பட ரிலீசுக்காக இந்த சந்திப்பு நடந்தது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விஜய் சந்திப்பு குறித்து கூறிய போது ’விஜய் தன்னை சந்தித்த போது ’மாஸ்டர்’ படத்திற்காக மட்டும் தன்னிடம் கோரிக்கை வைக்கவில்லை என்றும், ஒட்டுமொத்த திரைப்படத்துறைக்காகவே அவர் என்னை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

தனது ’மாஸ்டர்’ படம் மட்டுமின்றி பல கோடி ரூபாய் செலவு செய்து பல படங்கள் முடங்கி இருப்பதாகவும் அந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் செய்ய வேண்டுமானால் திரையரங்குகளில் முழு அளவில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறையின் சார்பாகவே தான் இந்த கோரிக்கையை வைப்பதாகவும் அதற்காகதான் என்னை சந்திக்க வந்ததாகவும் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

’மாஸ்டர்’ படத்திற்காக மட்டும்தான் விஜய் முதல்வரை சந்தித்தார் என்று செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது தன்னலமின்றி ஒட்டுமொத்த திரைத்துறைக்காகத்தான் விஜய் முதல்வரை சந்தித்து உள்ளார் என்பது முதல்வரின் இந்த பேட்டியிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து #SelflessActorVijay என்ற ஹேஷ்டேக்கை தற்போது விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பதும் இந்திய அளவில் இந்த டிரெண்ட் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos