close
Choose your channels

சூர்யா, தனுஷ், ஆர்யா.. இன்று மாலை அதிர்ஷ்டம் அடிக்க போவது யாருக்கு?

Thursday, August 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, தனுஷ் மற்றும் ஆர்யா ஆகிய மூவரில் ஒருவருக்கு இன்று மாலை அறிவிக்கப்படும் தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் புரட்டி போட்ட திரைப்படங்களாக ’ஜெய்பீம்’ ’சார்பாட்ட பரம்பரை’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய படங்கள் வெளியாகின.

இந்த மூன்று படங்களில் நடித்த சூர்யா, ஆர்யா மற்றும் தனுஷ் ஆகியோர்களில் ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது ஞானவேல், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர்களில் ஒருவருக்கு கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் தெலுங்கு திரை உலகில் வெளியான ’ஆர்ஆர்ஆர்’ ’புஷ்பா’ உள்ளிட்ட படங்களும் விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் திரைப்படங்களுக்கு அதிக தேசிய விருதுகள் கிடைத்துவரும் நிலையில் இந்த வருடமும் தேசிய விருதுகளை தமிழ் திரைப்படங்கள் குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.