close
Choose your channels

ஓட்டு போட வந்தபோது என்ன ஆச்சு? த்ரிஷாவுக்கு அதிர்ச்சி..!

Friday, April 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா இன்று தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது பெண் காவலர் ஒருவர் கீழே விழுந்து விட்டதை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது என்பதும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் , தனுஷ், உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

நடிகர்களைப் போலவே பிரபல நடிகைகளும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் நடிகை த்ரிஷா வாக்களிக்க வந்த நிலையில் அவர் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு தனது தாயாருடன் திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை அப்புறப்படுத்தி த்ரிஷாவை பெண் போலீசார் பத்திரமாக அனுப்பி வைக்கும் பணியில் இருந்தனர். அப்போது ஒரு பெண் காவலர் , பொதுமக்களை அப்புறப்படுத்திய போது தடுமாறி கீழே விழுந்ததை அடுத்து த்ரிஷா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.