close
Choose your channels

விஷாலுக்கு இருந்த தில் கமலுக்கு இல்லை: டிடிவி தினகரன்

Thursday, January 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றி விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்றும், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம் இது என்றும், இதற்கு மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம்' என்றும் நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் விபத்து ஒன்றில் மரணம் அடைந்த தனது ஆதரவாளர் சந்தானம் என்பவரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கமல்ஹாசனின் விமர்சனத்திற்கு பதிலளித்தார்.

வெற்றி பெற்றவர்களை விமர்சிக்கும் கமலுக்கு ஆர்.கே.நகரில் போட்டியிட துணிச்சல் இல்லாமல் போனது ஏன் எனக் கேள்வி எழுப்பிய தினகரன், விஷாலுக்கு இருந்த தில் கமலுக்கு இல்லை' என்று கூறினார்

நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிட துணிச்சலாக களம் இறங்கிய போதிலும் அவரை போட்டியிடவிடாமல் தடுக்க சதி செய்யப்பட்டதாகவும், விஷாலை போல் கமல்ஹாசனும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டிருந்தால் அவருக்கு களம் என்றால் என்ன என்ற நிலவரம் தெரிந்திருக்கும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.  மேலும் ஜெயலலிதா இல்லாததால் கபடி விளையாட நடிகர் கமல் நினைப்பதாகவும், அவர் விரக்தியின் எல்லையில் இருப்பதாகவும் தினகரன் கூறினார்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பே கமல், ரஜினி இருவருக்கும் பாகுபாடின்றி அனைத்து கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு வருவதை மக்கள் அமைதியுடன் வேடிக்கை பார்த்து வருவதாகவும், இதன் தாக்கம் தேர்தலின்போது தெரியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.