close
Choose your channels

சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகினர்!

Monday, May 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான பெங்காலி நடிகை ஒருவர் ஷுட்டிங் முடிந்து வீட்டிற்கு சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்காலி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சுசிந்திரா தாஸ்குப்தா. 29 வயதான இவர் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பராநகர் கோஷ்பாரா குறுக்குச் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது இவர் சென்ற இருசக்கர டாக்ஸி மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதால் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதாகவும் இதனால் நிலை தடுமாறி சுசிந்திரா தாஸ்குப்தா கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த லாரி ஒன்று திடீரென நடிகை சுசிந்திரா தாஸ்குப்தா மீது மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய அவருடைய கணவர் தேப் ஜோதி சென்குப்தா நேற்று ஷுட்டிங் முடிந்து வீடு திரும்பியபோது இந்தச் சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இளம் நடிகை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மேற்குவங்க சினிமா துறையினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.