close
Choose your channels

திடீரென துபாய்க்கு குடிபெயர்ந்த நடிகர் மாதவன்… என்ன காரணம்?

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

தமிழ் சினிமாவில் முன்னிணி நடிகராக இருந்துவரும் நடிகர் மாதவன் தனது மனைவி, மகனுடன் துபாயில் குடியேறிவிட்டதாக ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம்வந்த நடிகர் மாதவன் தற்போது 50 வயதைக் கடந்த நிலையில் அதே வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்புடன் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் அவதாரத்தையும் அவர் எடுத்துள்ளார். இந்நிலையில் அவருடைய 16 வயது மகன் வேதாந்த் சிறந்த நீச்சல் வீரராக உருவெடுத்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 7 கோப்பைகளை வென்றிருந்தார். இதற்கு முன்பு மார்ச் மாதம் நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றிருந்நதார். மேலும் வரும் 2026 ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தன்னை தயார்ப்படுத்தி வருகிறார்.

ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நீச்சல் பயிற்சிபெறும் பெரிய குளங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மகன் வேதாந்தின் விளையாட்டு பயிற்சிக்காக நடிகர் மாதவன் தனது குடும்பத்தோடு துபாயில் குடிபெயர்ந்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

மேலும் உலகம் முழுவதும் நடைபெறும் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு பல கோப்பைகளை வென்று தனக்கு பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட நடிகர் மாதவன் வேதாந்தை நடிப்பில் ஈடுபடுத்த விரும்பவில்லை என்றும் தனது மனைவி சரிதாவிற்கும் அதில் விருப்பமில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.