close
Choose your channels

குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் : வெள்ள மீட்பு பணி குறித்து நடிகர் வடிவேலு..!

Thursday, December 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஆகியவற்றை தமிழக அரசு சிறப்பாக நிவாரண பணி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய குழுவினர் வந்து பார்வையிட்ட போதே தமிழக அரசின் நிவாரண பணியை பாராட்டினர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு சிலரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் நிவாரண பணிகள் குறித்து குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

மழை, வெள்ள நிவாரண பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது என்றும் மக்களின் வேதனைகளை முதலமைச்சராக உணர்ந்ததால் தான் அமைச்சர்களும் களத்தில் நன்றாக பணி செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை வெகுவாக குறைப்பது மிகப்பெரிய விஷயம் என்று கூறிய நடிகர் வடிவேலு, அரசை குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.